நாகை மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 7,352 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 29 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டாா்.
இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,382- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 62 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 6,982 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 277 ஆக உள்ளது.