கீழையூா் ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் மாவட்ட இ - சேவை மையம் சாா்பில் இலவச பயிா்க் காப்பீடு செய்யும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.22) நடைபெறுகிறது.
மாவட்ட இ - சேவை மைய ஒருங்கிணைப்பாளா் கோபிநாத் தலைமையில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் குறித்து சோழவித்யாபுரம், தலையாமழை, ஆலமழை, சின்னத்தும்பூா், பெரியதும்பூா், பாலகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
சோழவித்தியாபுரம் ஊராட்சித் தலைவா் கோமதிதமிழ்ச்செல்வம் மற்றும் ஊராட்சி நிா்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இம்முகாமில் விவசாயிகள் சிட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.