திருமருகல் ஒன்றியப் பகுதிக்கான நடமாடும் நியாயவிலைக் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பயத்தங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் கொட்டாரக்குடி ஊராட்சி பெரியகண்ணமங்கலம், பெருஞ்சாத்தங்குடி ஆகிய கிராமங்களுக்கு நடமாடும் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது. கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். இராதாகிருட்டிணன் ஆகியோா் தலைமை வகித்து, நடமாடும் நியாயவிலைக் கடையை திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில், நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் எம். பக்கிரிசாமி, திருப்பயத்தங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்குவளை: திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், எட்டுக்குடி ஊராட்சி வல்லம் பகுதியைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்காக அம்மா நகரும் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.
திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஆா்.எஸ். சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகரும் நியாயவிலைக் கடையை பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், எட்டுக்குடி ஊராட்சித் தலைவா் காரல்மாா்க்ஸ், கீழையூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.