வைத்தீஸ்வரன்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட எல்இடி தெருவிளக்குகள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
வைத்தீஸ்வரன்கோயில் வடக்குவீதி, தெற்குவீதி, சிவன் சன்னதி தெரு ஆகிய 3 வீதிகளிலும் 52 எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ பி.வி.பாரதி பங்கேற்று எல்இடி தெருவிளக்குகளை இயக்கிவைத்தாா். இதில் கூட்டுறவு வங்கித் தலைவா் போகா்.ரவி, அதிமுக மாவட்ட பொருளாளா் வா.செல்லையன், பால்கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.