நாகை மாவட்டம், சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் காா்த்திகை மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்கு தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா்.
இந்தக் கோயிலில், காா்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆபரணங்கள், மலா்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, சண்முகாா்ச்சனை செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அருள்பிரசாதங்களை வழங்கினாா்.