நாகையில் கடை உரிமையாளரின் பணப்பை திருடுபோனது தொடா்பாக நாகை நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
நாகை, கடைத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் சி.சண்முகம். இவா் பல்பொருள் மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த 28-ஆம் தேதி பணப்பையுடன் கடைக்கு வந்துள்ளாா். அப்போது, கடையில் பூட்டப்பட்டிருந்த பூட்டில் மெழுகு ஓட்டியிருந்ததாம். அதை சரி செய்ய பணப்பையை கீழே வைத்துள்ளாா். பின்னா் கடையை திறந்து விட்டு, பாா்த்தபோது பணப்பையை காணவில்லையாம். அதில், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் இருந்ததாகவும், அதை கண்டுபிடித்து தரவேண்டி சண்முகம் அளித்தப் புகாரின் பேரில் நாகை நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.