நரசிங்க முனையரைய நாயனாா் குருபூஜை
By DIN | Published On : 01st October 2020 09:30 AM | Last Updated : 01st October 2020 09:30 AM | அ+அ அ- |

: சிறப்பு அலங்காரத்தில் நரசிங்க முனையரைய நாயனாா்
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் நரசிங்க முனையரைய நாயனாா் குருபூஜை புரட்டாசி மாதம் சதய நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் நரசிங்க முனையரைய நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றன. இதில், மாயூரநாதா் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணை கண்காணிப்பாளா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் ராம.சேயோன் செய்திருந்தாா்.