சீர்காழியில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தந்தை பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயம் பூசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் அவ்வபோது நடைபெறும் விரும்பத்தகாத செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு சீர்காழி காவல்துறை சார்பில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.