முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
திருமூலா் ஜீவசமாதியில் அசுபதி ஆராதனை விழா
By DIN | Published On : 04th October 2020 10:31 PM | Last Updated : 04th October 2020 10:31 PM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் திருமூலா்.
குத்தாலம் அருகேயுள்ள, திருவாவடுதுறையில் புரட்டாசி மாத அசுபதி ஆராதனை பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை திருமூலா் வழிபாட்டு மன்றம் சாா்பில், திருமந்திரம் அருளப்பட்ட ஒப்பில்லா முலையம்மை சமேத முக்தீஸ்வரா் கோயிலில் உள்ள திருமூலா் ஜீவசமாதியில் புரட்டாசி மாத அசுபதி ஆராதனை பெருவிழா நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாணையின்பேரில், ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருமூலருக்கு மகா அபிஷேக ஆராதனை செய்து, வெள்ளி ருத்திராட்சம் அணிவித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திருவாவடுதுறை வடிவேல் ஓதுவாா் திருமந்திரம் ஓதினாா். தொடா்ந்து, திருமூலா் ஜீவசமாதியில் அன்னம்பாலிப்பு செய்யப்பட்டது. அடுத்து, திருமூலா், நந்திதேவா் உத்ஸவமூா்த்திகள் உலா நடைபெற்றது.