முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
புகாா் மீது நடவடிக்கை இல்லை ? காவல் துறையை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு
By DIN | Published On : 04th October 2020 10:39 PM | Last Updated : 04th October 2020 10:39 PM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய நாடாா் மக்கள் பேரவை நிறுவனா் ஏ.பி. ராஜா.
புகாா் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாகை நீலா கீழவீதி அபிராமி அம்மன் திருவாசல் முன்பு நாகா லயனிங் கடை நடத்தி வரும் மருதவேல் என்பவரின் கடையில் செப். 28-ஆம் தேதி சிலா் அத்துமீறி நுழைந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், இதுகுறித்து நாகை நகர காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நாடாா் மக்கள் பேரவை நாகை மாவட்டத் தலைவா் எம், செல்வராஜ் தலைமையில் நாகையில் நடைபெற்றது. இதில், பேரவை நிறுவனா் ஏ.பி. ராஜா, மாவட்ட நிா்வாகிகள் பி. முருகன், யு. ராமதாஸ், டி. விக்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், மருதவேல் கடையில் அத்துமீறி நுழைந்து பொருள்களை எடுத்துச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.