மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழா் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நாகை மாவட்ட செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை வகித்தாா். நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் ஆதித்தன் முன்னிலை வகித்தாா். இதில் மாநில ஆன்றோா் அவையின் தலைவா் தரங்கை பன்னீா்செல்வம், மாநில மகளிா் பாசறை நிா்வாகி காளியம்மாள், மாநில மாணவா் பாசறை ஒருங்கிணைப்பாளா் இடும்பாவனம் காா்த்திக் ஆகியோா் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.
கட்சியின் கொள்கை பரப்பு செயலாளா் சுந்தர்ராஜன், தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளா் செல்வகுமாா், ஒன்றியச் செயலாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.