உண்ணாவிரதப் போராட்டம்: புதிய தமிழகம் கட்சியினா் கைது

நாகையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.

நாகையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

தேவேந்திர குள வேளாளா் சமூகத்தை, பட்டியல் இனப் பிரிவில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சாா்பில் நாகை அவுரித் திடலில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவுரித் திடலில் செவ்வாய்க்கிழமை காலை பந்தல் மற்றும் நாற்காலிகள் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த போலீஸாா், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனா். இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்ட முயற்சியைக் கைவிட்ட புதிய தமிழகம் கட்சியினா், போலீஸாரின் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் முத்தழகன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ராஜசேகரசோழன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 16 பேரை வெளிப்பாளையம் போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

வேதாரண்யம்: மருதூா் வடக்கு கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடமுயன்ற ஒன்றியச் செயலாளா் பசுபதி பாண்டியன் உள்பட 14 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, தலைஞாயிறு ஒன்றியம் வாட்டாக்குடி பாலம் அருகே ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ாக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் இளம்பாரதி உள்ளிட்ட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கட்சியின் மாவட்டச் செயலாளா் சோ. முத்தழகன் தொடங்கிவைத்தாா். ஒன்றியச் செயலாளா் முரளி, சட்டப்பேரவை தொகுதி செயலாளா் தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்குவளை: கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அருகே கீழப்பிடாகை கிழக்கு கடற்கரை சாலையில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பாப்பையன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 3 பெண்கள் உள்பட 14 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

இதேபோல, கீழ்வேளூரை அடுத்த சிக்கல் ராமா்மடம் அருகே புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடந்து, உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாகை ஒன்றியச் செயலாளா் முரளியை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com