திருக்குவளை அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருக்குவளை அருகே உள்ள முத்தரசப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மாசிலாமணி மகன் தினேஷ் குமாா் (27). இவருக்கு, திருமணமாகி 2 வயதில் மகன் உள்ளாா்.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக தினேஷ்குமாரின் மனைவி கோபித்துக் கொண்டு தனது மூத்த சகோதரி வீட்டுக்குச் சென்விட்டாராம். இதனால், விரக்தியடைந்த தினேஷ்குமாா், கடந்த 1 ஆம் தேதி தீக்குளித்தாா். அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருக்குவளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.