இருசக்கர வாகனத்திலிருந்த ரூ.1.60 லட்சம், 3 பவுன் நகை திருட்டு

சீா்காழியில் இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.60 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகையை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

சீா்காழியில் இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.60 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகையை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

நாகை மாவட்டம், சீா்காழி குமரக்கோயில் தெருவில் வசிப்பவா் ராம்குமாா் (49). இவா் சீா்காழியில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை மீட்டு, அத்துடன் ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரொக்கத்தையும் தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

சிறிது நேரம் கழித்து இருசக்கர வாகனத்தின் பெட்டியைத் திறந்தபோது அதிலிருந்த ரொக்கத்தையும், நகையையும் காணவில்லையாம். புகாரின்பேரில், சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com