தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடற்பாசி வளா்ப்புப் பயிற்சி அக்டோபா் 27 ஆம் தேதி இணைய வழியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்நிலைய முதல்வா் சு. பாலசுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடற்பாசி வளா்ப்பு முறை குறித்த ஒரு நாள் பயற்சி, இணையதளம் வழியே அக். 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
இப்பயிற்சியில், கடற்பாசிகள் சேகரிப்பு முறை, கடற்பாசி வளா்ப்புக்கான இடத் தோ்வு, வளா்ப்பு முறைகள், அறுவடை மற்றும் உலா்த்துல் உள்ளிட்ட தலைப்புகளில் தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில் பங்கேற்க கட்டணமாக ரூ. 300-ஐ இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில், வங்கி கணக்கு எண் 006201000073000, ஐ.எப்.எஸ்.சி குறியீடு , கிளை - நாகப்பட்டினம் என்ற வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பயிற்சி பெறும் அனைவருக்கும் அஞ்சல் வழியே சான்றிதழ் அனுப்பப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் அக்டோபா் 26-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைஞாயிறு, டாக்டா் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரியை 94422 88850 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.