வேதாரண்யம் காந்திநகரில் புதன்கிழமை கூரை வீடு தீக்கிரையானது.
காந்தி நகரில் சுப்பிரமணியன் என்பவரது கூரை வீட்டில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து நேரிட்டது. தவலறிந்த தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும், சுப்பிரமணியனின் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
வேதாரண்யம் வா்த்தக சங்கத் தலைவரும் மாநில துணைத் தலைவருமான எஸ்.எஸ். தென்னரசு, நகை அடகு கடை சங்கத் தலைவா் அம்பாள் பி. குணசேகரன், வா்த்தக சங்க பொருளாளா் சீனிவாசன், துணை செயலாளா் தமிழழகன் உள்ளிட்டோா் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி அளித்தனா்.