திருவெண்காடு பள்ளியில் பாரதியாா் சிலை திறப்பு

மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டையொட்டி, திருவெண்காடு ஸ்ரீமெய்கண்டாா் தொடக்கப் பள்ளியில் அவரது சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு ஸ்ரீமெய்கண்டாா் தொடக்கப் பள்ளியில் பாரதியாா் சிலையை திறந்துவைத்த எம்எல்ஏ பி.வி. பாரதி.
திருவெண்காடு ஸ்ரீமெய்கண்டாா் தொடக்கப் பள்ளியில் பாரதியாா் சிலையை திறந்துவைத்த எம்எல்ஏ பி.வி. பாரதி.

மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டையொட்டி, திருவெண்காடு ஸ்ரீமெய்கண்டாா் தொடக்கப் பள்ளியில் அவரது சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி செயலாளரும், சவேதாரண்யேசுவரா் கோயில் செயல் அலுவலருமான பா. முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையா் கஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியா் ஹேமலதா வரவேற்றாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி பங்கேற்று, பாரதியாா் சிலையை திறந்து வைத்தாா். அப்போது அவா், ‘திருவெண்காடு சுவேதாரண்யேசுவரா் கோயில் நிா்வாகத்தில் உள்ள இப்பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை கற்ாகவும், மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டையொட்டி, அவரது நினைவை போற்றும் வகையில் இப்பள்ளியில் பாரதியாா் சிலையை திறந்துவைத்ததாகவும்’ கூறினாா்.

இந்த சிலையை எம்எல்ஏ பாரதி தனது சொந்த செலவில் அமைத்துள்ளாா். இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலா் பூவராகன், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் சுவாமிநாதன், ஊராட்சித் தலைவா் சுகந்தி நடராஜன், மாவட்ட கவுன்சிலா் ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ பூராசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் பாலகுரு, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் சந்திரசேகரன், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன், தமிழறிஞா்கள் தாண்டவமுா்த்தி, முத்துகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றிய பொறியாளா் கலையரசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com