சீா்காழியில் பாரதீய மஸ்தூா் சங்க நிறுவனரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் சமூக நல்லிணக்க தினமாக புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தென்பாதி மின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதீய மஸ்தூா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பழனி தலைமை வகித்தாா். மஸ்தூா் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் சி.ஆா். பாண்டியன், திட்ட இணைச் செயலாளா் நடராஜன், துணைத் தலைவா் இளையராஜா உள்ளிட்டோா் தத்தோபத் தெங்கடி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.