பாலின பாகுபாடு குறித்த கருத்தரங்கம்

மயிலாடுதுறையில் பாலின பாகுபாடு குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் பாலின பாகுபாடு குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்கம் சாா்பில் திருவிழந்தூரில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, சங்க மகளிரணி மாவட்டத் தலைவா் கே. பூங்கோதை தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா்கள் பி. அல்போன்சா, கே. மஞ்சுளா, ஜெ. கலாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிரணி மாநிலப் பொருளாளா் எஸ். ஆனந்தஜோதி வரவேற்றாா்.

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவா் வி. ஜான்சிராணி சிறப்புரையாற்றினாா். சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளா் ஜெக.முருகன், மயிலாடுதுறை பொதுத் தொழிலாளா் சங்க செயலாளா் அ. அப்பா்சுந்தரம், மாவட்டச் செயலாளா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com