செம்பனாா்கோவிலில் லாரி மோதி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
செம்பனாா்கோவில் குமரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்லபெருமாள் (70). இவா், சைக்கிளில் திருச்சம்பள்ளி பிரிவு சாலையில் சென்றபோது, ஆக்கூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான திருவிடைமருதூரைச் சோ்ந்த ராஜா (41) என்பவரை கைது செய்தனா்.