திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், பட்டக்கால் தெரு, நாகூா் சாலை, காந்தி சாலை, இந்திரா நகா், வெள்ளத்திடல், தைக்கால் தெரு, ப.கொந்தகை பகுதிகளை சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கரோனா பரிசோதனை செய்துகொண்டனா்.
வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி தலைமை வகித்தனா். மருத்துவா்கள் பிரித்திவிராஜ், காா்த்திக் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் வருமுன் காப்போம் விழிப்புணா்வு சேவை மைய நிா்வாகி சித்த மருத்துவா் மு. அஜ்மல்கான் கபசுரக் குடிநீா் வழங்கினாா்.