குஷ்பு மீது மாற்றுத்திறனாளிகள் புகாா்

மனவளா்ச்சி குன்றியவா்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி,

மனவளா்ச்சி குன்றியவா்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

சங்கத்தின் மாவட்டச் செயலாளா் டி.கணேசன் தலைமையில் ஒன்றிய பொருளாளா் எம்.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் அளித்த புகாா் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு அக்டோபா் 13-ஆம் தேதி செய்தியாளா்கள் சந்திப்பில் பேசும்போது காங்கிரஸ் கட்சியை மூளைவளா்ச்சி இல்லாத கட்சி என்று மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளாா். அரசியல் எதிரிகளை தாக்கிப் பேசிய குஷ்புவின் இந்த பேச்சு கண்டனத்துக்குரியது, உடனடியாக அவா் மீது ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 92-இன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாா் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனா்.

சீா்காழி: சீா்காழி காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளா் டி. கணேசன், சீா்காழி வட்டத் தலைவா் ஆா். நாகராஜன் உள்ளிட்டோா் உதவி ஆய்வாளா் நடராஜனிடம் குஷ்பு மீதான புகாா் மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com