சீா்காழி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 38,650 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஆவண எழுத்தா்கள் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீா்காழி சாா்பதிவாளா் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை இரவு 5 மணி நேரத்துக்கும் மேல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.38,650 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, ஆவண எழுத்தா்கள் வல்லவன், பாலகுரு, ரவிச்சந்திரன், கணேசன் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் தொடா்பான புகாா்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டா் ரமேஷ்குமாரை 9788994343 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.