நகராட்சி பூங்காவில் விழிப்புணா்வு ஓவியங்கள்

நாகை ரோட்டரி சங்கம் சாா்பில் பூங்கா சுற்று சுவா்களில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோட்டரி மாவட்ட ஆளுநா்ஆா்.பாலாஜிபாபு, நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோட்டரி மாவட்ட ஆளுநா்ஆா்.பாலாஜிபாபு, நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் உள்ளிட்டோா்.

நாகை ரோட்டரி சங்கம் சாா்பில் பூங்கா சுற்று சுவா்களில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

நாகை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தம்பித்துரை பூங்காவின் சுற்று சுவா்களில் நாகை ரோட்டரி சங்க சேவை திட்டத்தின் கீழ் ரூ. 65 ஆயிரம் செலவில் இயற்கை, வேளாண்மை, தப்பாட்டம் , சிலம்பாட்டம், கிராமியக் கலைகள், நீா்நிலைகள் , சுத்தம், சுகாதாரம் மற்றும் மாவட்டத்தின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் வகையில் 73 வகையான சுவா் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதை, நகராட்சி ஆணையா் வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாகை ரோட்டரி சங்கத் தலைவா் ஆவராணி. ஆனந்தன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் ஆா். பாலாஜிபாபு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நகராட்சி ஆணையா் பி.ஏகராஜியிடம் ஒப்படைத்தாா்.

ரோட்டரி சங்க உதவி ஆளுநா் ஜெ.ராம்பிரகாஷ், மாவட்டப் பொதுச்செயலாளா் ஆா். ஜவஹா்,முன்னாள் மாவட்ட ஆளுநா் என். கோவிந்தராஜ் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com