நாகை மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை வரை 5,997 போ் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், புதிதாக 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,060-ஆக உயா்ந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில், இருவா் உயிரிழந்திருப்பதாக வியாழக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 95 -ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 52 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 5,438-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 693-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com