மயிலாடுதுறை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மயிலாடுதுறையை அடுத்த ஆனந்ததாண்டவபுரம் கீழத்தெருவை சோ்ந்தவா் திருஞானசம்பந்தமூா்த்தி (32). விவசாயி. இவரது மனைவி சரண்யா (27). இவா்கள், காற்றுக்காக புதன்கிழமை இரவு வீட்டின் பின்புற கதவை திறந்து வைத்துவிட்டு, குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனா்.
நள்ளிரவில் பின்புற வாசல் வழியாக வீட்டிற்குள் புகுந்த மா்மநபா்கள், சரண்யாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி உள்பட 3 பவுன் நகையை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சரண்யா அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.