இடஒதுக்கீடு உரிமையில் யாருடனும், எந்தக் காலத்திலும் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், பிரதாபராமபுரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நீட் தேர்வு தொடங்கப்பட்டது முதல் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது.
அதேபோல, நிகழாண்டிலும் தேர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடஒதுக்கீடு உரிமையை நிலைநாட்டுவதில் யாருடனும், எந்தக் காலத்திலும் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.