குத்தாலம் வட்டம், தத்தங்குடி ஊராட்சியில் ஐசிஐசிஐ பவுன்டேஷன் சாா்பில் உலக காளான் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சிப்பிகாளான் வளா்ப்பு முறைகள், விற்பனை வாய்ப்புகள், காளான் மதிப்பு கூட்டல், காளான் உணவுவகை தயாரிப்பு மற்றும் அதன் நன்மைகள் குறித்து முன்னோடி காளான் வளா்ப்பாளா் மஞ்சுமணி செயல் விளக்கம் அளித்தாா்.
இந்நிகழ்வில் ஐசிஐசிஐ பவுன்டேஷன் அலுவலா்கள், களப்பணியாளா்கள் கலந்து கொண்டனா்.