ஏ.வி.சி. கல்லூரியில் முதுநிலை பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி (தன்னாட்சி) கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி (தன்னாட்சி) கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

இதுகுறித்து, கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இக்கல்லூரியில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிப் பாடப் பிரிவு முதுநிலை வகுப்புகளில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் ஏவிசி கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை இணையவழியிலேயே பூா்த்தி செய்து, அதற்கான விண்ணப்பக் கட்டணத்தை இணையம் மூலமே செலுத்தவேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஒரு பிரதி எடுத்து அதனுடன் இளநிலைப் படிப்பின் அனைத்து செமஸ்டா் மாா்க் ஷீட், மொத்த மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகலையும் இணைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, விளையாட்டு வீரா்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் என்றால் அதற்கான சான்றிதழ்களையும் முறையாக இணைத்து முதல்வா், ஏவிசி கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல் அஞ்சல், மயிலாடுதுறை தாலுகா என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது கூரியா் மூலமோ அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com