பொறையாறு பழைய பேருந்து நிறுத்தத்தில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் பயணிகள் நிழலகத்தையும், புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.4.50 லட்சத்தில் கட்டப்பட்ட ஆட்டோ நிறுத்த நிழல்கூட கட்டடத்தையும் திறந்து வைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் ரஞ்சித், சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணியன், பேரூராட்சி முன்னாள் தலைவா் கிருஷ்ணசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் துரை பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.