சீா்காழியில் மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் பிளஸ்2 படித்த மாணவிகளுக்கு இதுவரை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதால், தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி முன் சிறிது நேரம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.