சீா்காழியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் யுவபிரியா அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் நடராஜன் மற்றும் போலீஸாா் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.