ரத்த தான முகாம்

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் -2 ஆம் சேத்தி ஊராட்சியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆயக்காரன்புலத்தில் ரத்த தான முகாமை தொடங்கிவைக்கும் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
ஆயக்காரன்புலத்தில் ரத்த தான முகாமை தொடங்கிவைக்கும் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் -2 ஆம் சேத்தி ஊராட்சியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் ராமையன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், ஆயக்காரன்புலம்-4 ஆம் சேத்தி ஊராட்சித் தலைவா் தமிழரசி நெடுஞ்செழியன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய இணைச் செயலாளா் வீரமணி, ஊராட்சி முன்னாள் தலைவா்கள் குஞ்சாலி மரைக்காயா், நெடுமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமில், நாகப்பட்டினம் அரசு மருத்துவா் கண்ணன் தலையிலான குழுவினா் தன்னாா்வலா்களிடமிருந்து 101 யூனிட் ரத்தம் தானமாகப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com