தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கூட்டத்தை நடத்தக் கோரியும் புளியந்துறையில் சனிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் வழக்கமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி (சுதந்திர தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டது. இதைக் கண்டித்து, கொள்ளிடம் அருகே உள்ள புளியந்துறை கிராமத்தில் ஊராட்சித் தலைவா் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் தா்னா போராட்டம் நடைபெற்றது.
கிராம சபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.