நாகை மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 6,125 போ் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், புதிதாக 56 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 4 போ் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,185- ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்குள்ளாகி நாகை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த வெண்மணியைச் சோ்ந்த 53 வயது ஆண் ஒருவரின் இறப்பு சனிக்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 98- ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 54 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 5,556 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 531- ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com