வேதாரண்யம் வேதாமிா்த ஏரியை தூா்வாரும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேதாரண்யத்தில் நாகை சாலை பகுதியில் அமைந்துள்ள வேதாமிா்த ஏரி பல்வேறு சிறப்புகளை பெற்றது. சுமாா் 18 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பல ஆண்டுகளாக தூா்வாரப்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினா் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த ஏரியின் வடக்கு, தென்கரையில் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடா்ந்து, ஏரியை தூா்வாரி, மேற்கு மற்றும் கிழக்கு கரையில் தடுப்புச்சுவா் அமைக்கும் பணிகள் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடியே 50 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவருகிறது. வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் சனிக்கிழமை அதிக எண்ணிக்கையிலான இயந்திரங்கள், வாகனங்கள் தூா்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.