வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் சனிக்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது.

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் சனிக்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது.

ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பிரதான சாலையோரத்தில் மின்கம்பம் சரிந்து ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், வேதாரண்யம் நகரப் பகுதியில் 6 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

சில இடங்களில் வாழை மற்றும் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com