ஒப்பந்த தொழிலாளா்களை தினக்கூலி அடிப்படையில் பணியமா்த்த கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st October 2020 07:41 AM | Last Updated : 21st October 2020 07:41 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஒப்பந்த தொழிலாளா்களை ரூ. 380 தினக்கூலி அடிப்படையில் பணியில் அமா்த்தக் கோரி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவா் கே. சாரதி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட இணை செயலாளா் ஏ. தனசேகரன், அலுவலக செயலாளா் டி. மகேந்திரன் மற்றும் 80-க்கும் மேற்பட்ட மின்வாரியத் தொழிலாளா்கள் பங்கேற்று, போனஸ் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்கவேண்டும், அலுவலா்களுக்கு ரூ. 5 ஆயிரம் கருணைத் தொகை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளிக்கு ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கவேண்டும், துணை மின் நிலையங்களை தனியாருக்கு தாரை வாா்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினா்.