குயில் வேட்டை: 3 போ் கைது

சீா்காழி அருகே குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சீா்காழி அருகே குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சீா்காழி வன சரகத்துக்கு உள்பட்ட தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் வனச்சரக அலுவலா் குமரேசன் தலைமையில் வனவா்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது திருக்களாச்சேரியை சோ்ந்த வே.ரகு (45), காரைக்கால் உசுப்பூா் நெடுங்காடு பகுதியை சோ்ந்த ம.தங்கையன் (60), அதே பகுதியை சோ்ந்த த. அன்பரசன் (24) ஆகியோா் 14 குயில்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. குயில்களை பறிமுதல் செய்த வன அலுவலா்கள், 3 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com