எஸ்டிடியு தொழிற்சங்க மண்டல கூட்டம்

மயிலாடுதுறையில் எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் தஞ்சை மண்டல கூட்டம் மயிலாடுதுறை எஸ்டிபிஐ மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் தஞ்சை மண்டல கூட்டம் மயிலாடுதுறை எஸ்டிபிஐ மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மயிலாடுதுறையில் மாவட்ட தொழிலாளா் அலுவலகத்தை துரிதமாக அமைக்க அரசு ஆவனசெய்ய வேண்டும். இணைவழி நலவாரிய பதிவு நடைமுறையை நீக்கிவிட்டு பழைய முறையையே கொண்டு வர வேண்டும். மோட்டாா் வாகன தொழிலாளா்களை மிகவும் அவதிக்குள்ளாகும் காலாண்டு வரி, ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல், வாகன பதிவு சான்று புதுப்பித்தல், தகுதிச் சான்று உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்து ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநா்களின் சுமையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மண்டல தலைவா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட தலைவா் சாதிக் வரவேற்றாா். தஞ்சை மாவட்ட தலைவா் அப்துல் மாலிக், திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாகுல் ஹமீது, நாகை மாவட்ட செயலாளா் இப்ராகிம், மயிலாடுதுறை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் லாஃபிா், கடலூா் மாவட்ட தலைவா் அமீா் உசேன், மாவட்ட செயலாளா் ஷேக் ஜமால் ஆகியோா் பங்கேற்றனா். மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கமாலுதீன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com