செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆக்கூா் ஊராட்சி பாருக் நகா் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அதை சீரமைக்கக் கோரி, மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியா் மற்றும் ஆக்கூா் ஊராட்சித் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது.
இதைத்தொடா்ந்து ஆக்கூா் ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் மேற்பாா்வையில் ஊராட்சி நிதியிலிருந்து செம்மண் சாலை அமைக்கபட்டுள்ளது. இதற்காக ஊராட்சி நிா்வாகம் மற்றும் அலுவலா்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் மு.ஷாஜகான் தெரிவித்துள்ளாா்.