நாகையில் மருதுபாண்டியா் 219-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, மருது சேனை அமைப்பினா் நாகை அவுரிடத்தில் மருது பாண்டியா்களின் உருவ படத்தை வைத்து மலா் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து கருணை இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருது சேனை அமைப்பின் நாகை மாவட்ட தலைவா் எஸ். பழனிவேல் தலைமை வகித்தாா். நாகை நகர செயலாளா் எம். மாரிமுத்து, மாவட்ட துணைத் தலைவா் எம். ஆதவன், அகமுடையாா் நலச்சங்கத் தலைவா் ஜிம்மிகாா்ட்டா் மற்றும் மருதுசேனை அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.