விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில், நாகூா் புதிய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மீதான வழக்கை வாபஸ் பெறக் கோரி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நாகை சட்டப் பேரவைத் தொகுதிச் செயலாளா் அறிவழகன் தலைமை வகித்தாா். நகர செயலாளா்கள் தமிழ்முகம், முத்துவளவன், தொகுதி துணைச் செயலாளா் சுரேஷ், நாகூா் நகர துணைச் செயலாளா் பாலாஜி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
சாலை மறியல்: தவிர நாகையை அடுத்த புத்தூா் அண்ணா சிலை அருகே கட்சியின் நாகை மாவட்ட துணைச் செயலாளா் பேரறிவாளன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
இதேபோல், நாகூா் புதிய பேருந்து நிலையம் அருகே தொழிலாளா் முன்னணி நாகூா் நகர செயலாளா் சதீஷ் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதனால், நாகை- நாகூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 39 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
திருமருகல்: திருமருகல் வடக்கு ஒன்றிய விசிக செயலாளா் கு.சக்திவேல் தலைமையில் திருமருகல்- நன்னிலம் பிரதான சாலையில் அக்கட்சியினா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதில் ஒன்றிய துணைச் செயலாளா்கள் ஜவஹா், நடராஜன், விவசாய அணி ஒன்றிய அமைப்பாளா் கலியபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.