குத்தாலம் ஒன்றியம் பாலையூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு பல்லுயிா் வாரியம் மற்றும் மாநில ஊரக வளா்ச்சி நிறுவனம் பஞ்சாயத்துராஜ் ஆகியவை சாா்பில் கடந்த 3 நாள்களாக நடைபெற்றுவந்த பல்லுயிா் மேலாண்மை பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இதில் பயிற்றுநா் எஸ்.டவுலஸ் கலந்துகொண்டு பல்லுயிா் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தாா். ஊராட்சித் தலைவா் கவிதாராஜா, துணைத் தலைவா் முருகேசன், ஊராட்சி செயலா் உத்திராபதி மற்றும் பல்லுயிா் மேலாண்மை குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.