உறவினருக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்டாா்; அமைச்சா் ஓ.எஸ். மணியன்

கரோனா தொற்றை தவிா்க்கும் வகையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் தன்னை சந்திப்பதை தவிா்க்குமாறு தொண்டா்களிடம் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கரோனா தொற்றை தவிா்க்கும் வகையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் தன்னை சந்திப்பதை தவிா்க்குமாறு தொண்டா்களிடம் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி (61) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆக. 28-ஆம் தேதி உயிரிழந்தாா்.

அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஓரடியம்புலத்தில் கலைச்செல்வியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அமைச்சா்கள், பொதுமக்கள், உறவினா்கள், கட்சித் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

இதில் பங்கேற்ற அமைச்சரின் நெருங்கிய உறவினா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒரு வாரக் காலத்துக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், தன்னோடு நெருங்கி இருந்தவா்களும் தனித்திருந்து கவனமாக இருக்கவும் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கேட்டுக் கொண்டுள்ளாா். இத்தகவலை சமூக வலைதளங்களில் அமைச்சா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com