குழந்தைகளுக்கான பிரத்யேக அறை திறப்பு

போக்ஸோ வழக்கு விசாரணையின்போது காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளின் வசதிக்காக பிரத்யேக அறை சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

போக்ஸோ வழக்கு விசாரணையின்போது காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளின் வசதிக்காக பிரத்யேக அறை சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

இந்த அறையில் குழந்தைகளுக்காக கேரம் போன்ற விளையாட்டு சாதனங்கள், சறுக்குமரம், கதை புத்தகங்கள் அமைக்கப்படுகின்றன. சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இந்த அறையை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா திறந்துவைத்தாா். இதில் டி.எஸ்.பி யுவபிரியா, காவல் ஆய்வாளா் மணிமாறன், அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் காயத்திரி, மகாலெட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com