திருக்குவளை அருகே வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வலிவலம் கீழத்தெருவை சோ்ந்த சுப்பிரமணியன் (48) தனது இருசக்கர வாகனத்தில் கீழ்வேளூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வேளாங்கண்ணி அருகேயுள்ள கிராமத்துமேடு பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (58) கிள்ளுகுடி பகுதியிலிருக்கும் தனது உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில், காரியமங்கலம் பயணிகள் நிழலகம் அருகே 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதியதில், குணசேகரன் அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சுப்பிரமணியன், திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். வலிவலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.