தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தேசிய குழந்தைகள் விருதுக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் தேசிய குழந்தைகள் விருதுக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

திறமைகள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் குழந்தை சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு பால சக்தி புரஸ்கா் விருது, பால கல்யாண் புரஸ்கா் விருது ஆகிய தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை மற்றும் வீரதீர செயல்களில் ஈடுபட்ட தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில் பால சக்தி புரஸ்கா் என்ற தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை, புத்தகம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.

குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில் குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் பால கல்யாண் புரஸ்கா் விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபா்களுக்கான விருது ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.

இந்த விருதுகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிா் மற்றும் சிறாா் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விருதுக்கான விண்ணப்பங்களை செப். 15-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியே சமா்ப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com