மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளா் நவாஸ்கான் தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவா் ஷபீக் அஹமது, மாவட்ட பொதுச்செயலாளா் சங்கை ரஃபி, மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன், திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ.மகேஷ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.