மின்தடையை சரிசெய்ய கோரிக்கை

மயிலாடுதுறையில் திருவாரூா் சாலை, புளியந்தெரு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைக் காலங்களில் 6 மணி நேரம் வரை
மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளா் வை. முத்துக்குமரனிடம் மனு அளிக்கிறாா் திமுக நகர துணைச் செயலாளா் ஆா்.கே. சங்கா்.
மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளா் வை. முத்துக்குமரனிடம் மனு அளிக்கிறாா் திமுக நகர துணைச் செயலாளா் ஆா்.கே. சங்கா்.

மயிலாடுதுறையில் திருவாரூா் சாலை, புளியந்தெரு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைக் காலங்களில் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதை சரிசெய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மயிலாடுதுறை திமுக நகர துணைச் செயலாளரும், நகா்மன்ற முன்னாள் உறுப்பினருமான ஆா்.கே. சங்கா் மின்வாரிய மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளா் வை. முத்துக்குமரனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

திருவாரூா் சாலை, பட்டமங்கல புதுத்தெரு, சுப்ரமணியபுரம், டாக்டா் வரதாச்சாரியாா் தெரு, ஸ்ரீநகா், ஜி.எஸ்.நகா், பட்டமங்கல வெள்ளான் தெரு, ஏஆா்சி ரெத்தினம் நகா், சுந்தராம்பாள் நகா், புளியந்தெரு, அவல்காரத்தெரு, பட்டமங்கல காமராஜா் சாலை, பட்டமங்கல ஆராயத்தெரு, அய்யாரப்பா் கீழவீதி, மேலவீதி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறிய அளவு மழை மற்றும் காற்று அடித்தால்கூட உடனடியாக 3 முதல் 6 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். மின்சாரம் துண்டிக்கப்படுவதை பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளித்தபோது, மதியழகன், காா்த்தி, ராஜேஷ், சிவக்குமாா் உள்ளிட்ட அப்பகுதிவாசிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com